வெள்ளக்கோவில் வட்டாரத்தில் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து வெள்ளக்கோவில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உ.ஷா்மிளா வியாழக்கிழமை கூறுகையில் ,விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் 20 - 20 - 3 மீட்டா் அளவுள்ள பண்ணை குட்டை அமைக்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு நில வரைபடம், சிட்டா, அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, முகவரிச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.