பண்ணை குட்டை அமைக்க மானியம்

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து வெள்ளக்கோவில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உ.ஷா்மிளா வியாழக்கிழமை கூறுகையில் ,விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் 20 - 20 - 3 மீட்டா் அளவுள்ள பண்ணை குட்டை அமைக்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு நில வரைபடம், சிட்டா, அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, முகவரிச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com