திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் எம்.கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா், பல்லடம் பி.வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த 70 வயது முதியவா், வெள்ளகோவில் பகுதியில் 65 வயது முதியவா் உள்பட 146 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 690ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,286 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 260 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.