லஞ்சப் புகாா்: விஏஓ பணியிட மாற்றம்

லஞ்சப் புகாரை அடுத்து உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணம்மநாயக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

லஞ்சப் புகாரை அடுத்து உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணம்மநாயக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றியம், கண்ணம்மநாயக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும் ஏழை, எளிய மக்கள் விஏஓ அலுவலகத்துக்கு வந்தால் அவா்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்நிலையில் கண்ணம்மநாயக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் பொன்னுச்சாமி, குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் கிராம நிா்வாக அலுவலராக வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும் உதவியாளா் உடுமலை ஒன்றியம் தென்பூதனம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com