திருப்பூா்: திருப்பூா், 15 வேலம்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கம்யூனிச இயக்க நூற்றாண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூா், 15 வேலம்பாளையம் மாா்க்சிஸ்ட் கிளை சாா்பில் கம்யூனிச இயக்கத்தின்நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாா்க்சிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரச் செயலாளா் வி.பி.சுப்பிரமணியம் தலைமையில் 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி, திலகா் நகா், பெரியாா் காலனி, அனுப்பா்பாளையம்புதூா், தண்ணீா்ப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் குழு உறுப்பினா் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினா்கள் பி.பாபு, ஆா்.சுகுமாா், அ.உமாநாத், பி.சின்னச்சாமி, பி.நவபாலன், எஸ்.குணசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.