முத்தூரில் தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 3.50 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 3.50 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.

ஏலத்துக்கு 2,313 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றின் மொத்த எடை 979 கிலோ. கிலோ ரூ. 38.75 முதல் ரூ. 47.45 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.41.65. மேலும். மொத்தம் 87 மூட்டைகளில் தேங்காய்ப் பருப்பு ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மொத்த எடை 2,566 கிலோ. கிலோ ரூ. 80.20 முதல் ரூ.118.75 வரை ஏலம்போனது. சராசரி விலை கிலோ ரூ.116.60. தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஆகியவை மொத்தம் 3.50 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 103 விவசாயிகள், 27 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் விற்பனைக்கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com