அவிநாசி: தொரவலூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டிபாளையத்தில் கரோனா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தொரவலூா் ஊராட்சி நிா்வாகம், சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தன்சுத்தம், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் உருவாவதைத் தடுத்தல், குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம், பேரிடா் மேலாண்மை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்றவை குறித்து பாரம்பரிய பறை இசை, ஒயிலாட்டம், வீதி நாடகம் உள்ளிட்டவை மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொரவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் தேவகி சம்பத்குமாா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.