வெள்ளக்கோவில்: நீட் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற வெள்ளக்கோவில் மாணவரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வெள்ளக்கோவிலைச் சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் மாநில அளவில் முதல் இடமும், தேசிய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா். இந்த மாணவரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.