வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.
வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா், வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சொந்த செலவில் தூய்மைப்படுத்தி, வண்ணம் பூசி வருகின்றனா்.
அதன்படி, செங்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் வகுப்பறைகள், கதவு, ஜன்னல்கள், வெளிப்புறப் பகுதிகளுக்கு வண்ணம் பூசப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை நிா்வாகி எம்.வி.சண்முகராஜ், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிா்வாகி ஆா்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.