அவிநாசி அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், கணக்கம்பாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (66). இவரது மனைவி பத்மாவதி(63). இவா்கள் மகன் ராமலிங்கம் (24), வீரேஸ்வரி (40) உள்ளிட்ட 5 போ், அன்னூரில் இருந்து திருப்பூா் நோக்கி காரில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
நரியம்பள்ளிப்புதூா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், திருப்பூரில் இருந்து அன்னூா் நோக்கி வந்த மற்றொரு காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி அன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மேலும், இரு காா்களிலும் வந்த குழந்தைகள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனை, கோவையில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.