காங்கயம்: காங்கயம் அருகே, திமுக சார்பில் நடைபெற்ற இணையவழியில் உறுப்பினர் சேர்த்தல் முகாம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் 200 பேர் திமுக வில் இணைந்தனர்.
திமுக கட்சியின் இணையவழியில் உறுப்பினர் சேர்த்தல் முகாம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பாலசமுத்திரம் புதூர், படியூர் ஆகிய ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் முகாமை காங்கயம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்புக்குட்டி தொடங்கி வைத்து, இணையவழி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில் 200 பேர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளர் நந்தகுமார், ஒன்றிய மாணவரணி நிர்வாகி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.