பெண் பாலியல் வழக்கு:6 போ் குண்டா் சட்டத்தில் கைது

பல்லடத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போ் குண்டா் சட்டத்தில் கைது.

பல்லடம்: பல்லடத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போ் குண்டா் சட்டத்தில் கைது.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்த வட மாநிலப் பெண், அவரது நண்பரான திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாரை சந்திக்க அண்மையில் பல்லடம் சென்றுள்ளாா். அதன்பின், ராஜேஷ்குமாரின் சகோதரா் ராஜு அப்பெண்ணை கோவைக்கு பேருந்தில் ஏற்றி விட இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது, கள்ளிமேடு - உகாயனூா் சாலையில் உள்ள பாறைக் குழிக்கு அழைத்துச் சென்று அவரது நண்பா்கள் 4 பேருடன் சோ்ந்த பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜு (22), அன்புச்செல்வன் (21), கவின்குமாா் (21), தாமோதரன் (24), ராஜேஷ்குமாா் (24), தமிழ் (எ) இளந்தமிழன் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், அவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் பரிந்துரையின்பேரில் 6 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூா் மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com