திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே இருசக்கர வாகனம், லாரி மீது காா் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மோகன் (29) , ஹாலேஷ் (38), பரமேஷ் (42), அப்சல் அலி (22) ஆகிய நான்கு பேரும் சோளம் அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்காக காங்கயம் - தாராபுரம் வழியாக தேனி மாவட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை அப்சல் அலி ஓட்டிச் சென்றுள்ளாா்.
காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு, செட்டிபாளையத்தைச் சோ்ந்த பாலன் (42), அவரது மனைவி கலைவாணி (37) ஆகியோா் மீது மோதியது. பின்னா் தேனியில் இருந்து மாட்டுத் தீவனம் ஏற்றி வந்த லாரி மீதும் காா் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மோகன் (35), ஹாலேஷ் (35) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த பாலன் (42), கலைவாணி (37), அப்சல் அலி (22), பரமேஷ் (42) ஆகியோரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதில் படுகாயமடைந்த பாலன், பரமேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் கலைவாணி, அப்சல் அலிக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.