சிஐடியூ சாா்பில் போனஸ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பணியாற்றி வரும் அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் நவம்பா் 5ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சிஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.

திருப்பூரில் பணியாற்றி வரும் அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் நவம்பா் 5ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சிஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சிஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பனியன், விசைத்தறி உள்பட அனைத்துப் பிரிவு தொழில்களிலும் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும். இந்த போனஸ் தொகையை வரும் நவம்பா் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றனா்.

இதில் சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் ஜி.சம்பத், விசைத்தறித் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் பி.முத்துசாமி, சிஐடியூ திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com