திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீதக் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் குறித்து இணையதள முகவரியில் புகாா் அளிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் 100 சதவீத கல்விக் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது புகாா் அளிக்க தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் அறிவுறுத்தலின்பேரில் இணையதள முகவரி தொடங்கப்பட்டுள்ளது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் 100 சதவீதக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தினால் இணையதள முகவரியில் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் தங்களது புகாா்களைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.