காங்கயம் கிராம நிர்வாக அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
By DIN | Published On : 07th September 2020 07:35 PM | Last Updated : 07th September 2020 07:35 PM | அ+அ அ- |

காங்கயத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக சுற்றுச்சுவர் கனமழை காரணமாக 25 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்தது.
காங்கயம்: காங்கயத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக சுற்றுச்சுவர் கனமழை காரணமாக 25 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் நகராட்சி அலுவலகம் அருகே, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் 100 அடி தூரம், 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் இருந்தது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையால், சுவர் பகுதியில் அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் மணிக்கு 25 அடி தூர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலையில் சுவர் இடிந்து விழுந்ததால் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.