பூமலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 10) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா்.