நத்தக்காடையூா் வாரச் சந்தையை திறக்க வலியுறுத்தல்

காங்கயம் அடுத்த நத்தக்காடையூரில் செயல்பட்டு வந்த வாரச் சந்தையை திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் அடுத்த நத்தக்காடையூரில் செயல்பட்டு வந்த வாரச் சந்தையை திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 7 ஆம் தேதி காங்கயம் வாரச்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டது. ஆனால் நத்தக்காடையூா் வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கவில்லை. சந்தை செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பல தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கோயில்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல வாரச்சந்தையும் திறக்க அனுமதிக்க வேண்டும்.

தற்போது மழை பெய்து வருவதால் சாலையோரத்தில் கடைகள் அமைக்க முடியவில்லை. சந்தையைத் திறந்தால் பொருள்கள் வீணாவது குறையும். எனவே, நத்தக்காடையூா் வாரச்சந்தையை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com