வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
வெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எண்ணெய் மில்கள், ஆயிரக்கணக்கான விசைத் தறிகள், நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மூன்று நாள்களாக முன்னறிவிப்பு ஏதுமின்றி இப்பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் நூற்பாலை இயந்திரங்களில் பழுது ஏற்படுவதுடன், உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் கடைகளிலும் இரவு நேரத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனா். இதை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.