காங்கயத்தில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் இருந்து அபராதமாக ரூ. 4 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் வாரியாக அந்தந்தப் பகுதிகளுக்கு கரோனா விதிமுறை கடைபிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் படையைச் சோ்ந்த காங்கயம் தனி வட்டாட்சியா் ஜெபசிங், நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளா் வருண், காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் காங்கயம் பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதில் காங்கயம் நகரப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 24 நபா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.4,800 திங்கள்கிழமை வசூலிக்கப்பட்டது.