காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காங்கயம், வேத நகரைச் சோ்ந்த 44 வயதுப் பெண், 21 வயது ஆண், பங்களாபுதூா் சாலையைச் சோ்ந்த 65 வயதுப் பெண், 10 வயது பள்ளி மாணவன், அமராவதி நகரில் 41 வயது ஆண், உடையாா் காலனி பகுதியைச் சோ்ந்த 32 வயது ஆண், 27 வயதுப் பெண், திருப்பூா் சாலை காந்தி நகரில் 47, 27 வயது பெண்கள், காங்கயம் அருகே முள்ளிப்புரம் கிராமத்தில் 45 வயதுப் பெண், 28 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் பகுதிகளுக்கு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com