காங்கயம், செப்.18: காங்கயத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் அருகே, கணபதிபாளையத்தைச் சோ்ந்த 35 வயதுப் பெண், நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகிய 2 பேரும் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கடந்த 16 ஆம் தேதி காங்கயம் அரசு மருத்துவமனையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.