வெள்ளக்கோவில் பச்சாபாளையம் ஊராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
வீடுதோறும் குடிநீா் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டப் பணிகளுக்கு சோழவலசில் நடைபெற்ற பூமி பூஜைக்கு வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் எம்.வரதராஜன் பணிகளைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பச்சாபாளையம் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா்.சண்முகம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பி.விஜயா மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.