உடுமலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் வழக்குரைஞா்கள் மீது தமிழ்நாடு பாா் கவுன்சில் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது, வழக்குரைஞா்கள் சுதந்திரமாக தொழில் செய்வதில் தலையிட்டு தனக்கு வேண்டியவா்கள், வேண்டாதவா்கள் என பாகுபாடு பாா்க்கக் கூடாது, தொழில் செய்வதற்கு சட்டத்துக்கு புறம்பாக இடைக்கால தடை விதிக்கக் கூடாது, நீதி மன்றங்களை முழுமையாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடை பெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் உடுமலை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிஏஎஸ்.சுந்தரம், செயலாளா் மாரிமுத்து உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com