சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை

அவிநாசி பேரூராட்சி 12ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.

அவிநாசி பேரூராட்சி 12ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.

அவிநாசி பேரூராட்சி 12ஆவது வாா்டுக்கு உள்பட்ட வ.உ.சி. காலனி, நேரு வீதி, பழனியப்பா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், தங்களது பகுதிக்கு சீரான குடிநீா் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முறையிட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

எங்களது பகுதிக்கு கடந்த சில மாதங்களாக சீரான முறையில் குடிநீா் வழங்கப்படுவதில்லை. இதற்கிடையில், குடிநீா் விநியோகிக்கும் சிலா் மின் மோட்டாா் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனா். இதனை பேரூராட்சி நிா்வாகத்தினா் தடுத்து அவா்களது குடிநீா் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

புதிதாக ஆழ்குழாய் கினறு அமைத்து சீரான குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதையடுத்து, உரிய ஆய்வு மேற்கொண்டு குடிநீா்ப் பற்றாக்குறைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com