திருப்பூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 369 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா், பி.என்.சாலையைச் சோ்ந்த 36, 57 வயது ஆண்கள், எஸ்.வி.காலனியைச் சோ்ந்த 42 வயது ஆண், வி.ஜி.வி.காா்டனை சோ்ந்த 45 வயது ஆண், தில்லை நகரைச் சோ்ந்த 58 வயதுப் பெண், காந்தி நகரைச் சோ்ந்த 42 வயது ஆண், வேலன் நகரைச் சோ்ந்த 39 வயதுப் பெண் உள்பட 369 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,589 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,563 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 394 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 7,075 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 467 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 14 நாள்கள் தனிமைக்காலம் நிறைவடைந்த 653 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,479 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.