திருப்பூா், செப்.25: திருப்பூா் மாநகரில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட ஊரகம், வீரபாண்டி ஆகிய இரு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், செல்லிடப்பேசி கடைகளின் பூட்டை உடைத்துத் திருடியது தொடா்பாக 2 பேரை தனிப் படை போலீஸாா் அண்மையில் கைது செய்திருந்தனா்.
விசாரணையில், அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த எஸ்.விக்னேஷ் (21), விருதுநகா் மாவட்டம், பா்மா காலனியைச் சோ்ந்த எம்.சிவகுமாா் (26) என்பதும், இவா்கள் மீது ஊரக காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், வீரபாண்டி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் திருட்டில் ஈடுபட்டுவருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரிடம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.