வெள்ளக்கோவில், செப். 25: வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகளுக்கு அரசின் பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் யு.சா்மிளா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இப்பகுதி விவசாயிகளின் வேளாண் வயல்களில் 20 மீட்டா், 20 மீட்டா், 3 மீட்டா் ஆழ அளவுகளில் பண்ணைக் குட்டை அமைப்பதற்கு ரூ.75 ஆயிரம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடி செய்த பழங்களைத் தரம் பிரித்து பைகளில் அடைத்து பாதுகாப்பாக வைப்பதற்காக சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக நடமாடும் விற்பனை வண்டி வாங்க ரூ.15 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் அமல்படுத்தப்பட்டுள்ள மானியங்களை பெறுவதற்கு சிட்டா, அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, நில வரைபடம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தக நகல், 2 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன்
தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்றாா்.