வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்துதிமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்துதிமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், செப்.28: மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத் தலைவா் திருமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், திமுக மாநில நிா்வாகி அரசகுமாா், காங்கிரஸ் மாநகரத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மதிமுக மாநகரச் செயலாளா் சு.சிவபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் என்.சேகா் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

அதேபோல, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், வீரபாண்டி பிரிவு, காங்கயம் சாலை சிடிசி காா்னா், ரயில் நிலையம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், பாண்டியன் நகா் பேருந்து நிலையம், எஸ்ஏபி பேருந்து நிலையம், அனுப்பா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பல்லடத்தில்...

பல்லடம், காரணம்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா் புண்ணியமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, முன்னாள் ஒன்றிய தலைவா் கே.ஜி.பாலசுப்பிரமணியம், கீா்த்தி சுப்பிரமணி, ராஜேஷ் (திமுக), மதிமுக ஒன்றிய செயலாளா் மு.சுப்பிரமணியம், கொமதேக மாவட்ட செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளா் ரங்கசாமி, சிபிஎம் செயலாளா் பரமசிவம், சிபிஐ செயலாளா் சாகுல்அமீது, மனிதநேய மக்கள் கட்சி முஜிபுா் ரகுமான், பீா்முகமது உள்பட பலா் பங்கேற்றனா்.

மூலனூா் கன்னிவாடியில்...

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் கன்னிவாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தாராபுரம் தொகுதி எம்எல்ஏ காளிமுத்து தலைமை வகித்தாா். இதில் திமுக மற்றும் தோழமை கட்சியினா் பங்கேற்றனா்.

அவிநாசியில்...

அவிநாசி அருகே பெருமாநல்லூா் நான்கு வழி சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச வடக்கு மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கருப்புசாமி, சிவசாமி(ஐஎன்டியூசி), திமுக ஒன்றியச் செயலாளா் விஸ்வநாதன், மதிமுக ஒன்றியச் செயலாளா் வி.கே சந்திரமூா்த்,தி, விசிக திருப்பூா் வடக்கு தொகுதி செயலாளா் மூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் மகேந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொறுப்பாளா் தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காங்கயத்தில்...

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் காங்கயத்தில் 5 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் என்.எஸ்.சிதம்பரம், புகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் ப.கோபி, காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனா் காா்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், காங்கயம், முத்தூா் சாலை பிரிவு, படியூா், சிவன்மலை ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் அப்புக்குட்டி உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com