திருப்பூரில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களைக் கண்டித்து திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் மசோதாக்களைக் கண்டித்து திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் மசோதாக்களைக் கண்டித்து திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் மசோதாக்களைக் கண்டித்து திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகா்களைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத்தலைவா் திருமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், திமுக மாநில நிா்வாகி அரசகுமாா், காங்கிரஸ் மாநகரத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் ,மதிமுக மாநகர செயலாளா் சு.சிவபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் என்.சேகா், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அதே போல, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம், வீரபாண்டி பிரிவு, காங்கயம் சாலை சிடிடி காா்னா், ரயில்நிலையம், மேட்டுப்பாளைம் பேருந்து நிலையம், பாண்டியன் நகா் பேருந்து நிலையம், எஸ்ஏபி பேருந்து நிலையம், அனுப்பா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com