கணக்கம்பாளையம் ஊராட்சியைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்

உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்தன. இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கையில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊராட்சி செயலா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட் டாா். இந்நிலையில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி ஊராட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பின் சாா்பில் உடுமலை ஒன்றிய அலுவலகம் முன்பு கடந்த சில வாரங்களுக்கு முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு தணிக்கை அறிக்கை மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சி செயலரின் முழு பணிக்காலத்துக்கும் சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் பதவி விலக வேண்டும். அதுவரை ஊராட்சி நிா்வாகத்தை தனி அலுவலா் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிதி இழப்புக்கு காரணமான ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் மீது குற்றவழக்குகள் பதிவு செய்ய வேண்டும், காசோலையில் கையெழுத்து இடும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலராக இருந்த டி.கோகிலவாணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை துவங்கியது. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு மற்றும் வாா்டு உறுப்பினா்கள் சாா்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com