அவிநாசி அருகே கருவலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக தேரோட்டம் நடைபெறாததால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு மாரியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளல், மாலை 3 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். வியாழக்கிழமை மாலை 2 மணிக்கு மீண்டும் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தோ் நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 3 ஆம்தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி ஆகியவை நடைபெறுகின்றன. 4ஆம் தேதி அம்மன் தரிசனம், மஞ்சள் நீா்விழா நடைபெறுகிறது. 5ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.