பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினத்தை ஆதரித்து திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். அதனால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழக உரிமைகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டாா். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அதிக செலவு செய்து விளம்பரம் செய்தாா்கள். ஆனால் இன்னும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டங்கள் எல்லாம் அறிவிப்போடு மட்டுமே உள்ளன; செயல்படுத்தவில்லை என்றாா்.