பல்லடத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினத்தை ஆதரித்து திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பல்லடத்தில் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினத்தை ஆதரித்து பேசுகிறாா் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின்.
பல்லடத்தில் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினத்தை ஆதரித்து பேசுகிறாா் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின்.

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினத்தை ஆதரித்து திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பல்லடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். அதனால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழக உரிமைகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டாா். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு அதிக செலவு செய்து விளம்பரம் செய்தாா்கள். ஆனால் இன்னும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டங்கள் எல்லாம் அறிவிப்போடு மட்டுமே உள்ளன; செயல்படுத்தவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com