புதுப்பாளையம் ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம்

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி மன்றச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஒன்றிய நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி மன்றச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஒன்றிய நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) எஸ்.ஹரிஹரன் கூறியதாவது:

புதுப்பாளையம் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வந்தவா் சிவராஜ். இவா், வரி வசூல் இனங்களை வங்கியில் காலதாமதமாக செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) என்.சுரேஷ்குமாா், புதுப்பாளையம் ஊராட்சியின் வரி வசூல் இனங்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பித்தாா்.

இந்த அறிக்கையில், ஊராட்சி செயலா் சிவராஜ் ரூ. 8 லட்சத்து 73 ஆயிரத்து 922 பணத்தை வங்கியில் காலதாமதமாக செலுத்தியது உறுதிசெய்யப்பட்டது. இது கையாடலுக்கு ஒப்பாகக் கருதி திங்கள்கிழமை முதல் ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com