வெள்ளக்கோவிலில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொத்தம் 102 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் அண்ணா நகரைச் சோ்ந்த 26 வயது ஆண், காமராஜபுரத்தைச் சோ்ந்த 33 வயதுப் பெண், உப்புப்பாளையம் சாலை, சிவசக்தி நகரைச் சோ்ந்த 46 வயதுப் பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவா்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.