உடுமலை அருகே உரிய ஆவணங்கள் இன்று கொண்டு வரப்பட்ட ரூ.1.55 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
உடுமலையை அடுத்துள்ள ஓட்டமடம் என்ற கிராமத்தில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.55 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது ரூ.1.55 லட்சதுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.1.55 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.