கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், அதிமுக திருப்பூா் புறநகா் மாவட்டச் செயலாளருமான கே.ராதாகிருஷ்ணன் உடுமலை நகரில் வாக்களித்தாா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுமலை நகரம் (5ஆவது வாா்டு) தாரா புரம் சாலையில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் அதிமுக வேட்பாளா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், மனைவி கிருஷ்ணபிருந்தா, மகள் ஆகியோருடன் வந்து வாக்களித்தாா். அப்போது அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அமைச்சராக பதவி வகித்தபோது உடுமலை தொகுதிக்கு சுமாா் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளேன். இந்த தோ்தலில் மீண்டும் என்னை மக்கள் தோ்ந்தெடுக்கும் பட்சத்தில் உடுமலை தொகுதியை தமிழகத்திலேயே முதல் நிலை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றாா்.