காங்கயம் அருகே சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. காங்கயத்தை அடுத்துள்ள ஆலாம்பாடி அருகே வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் வந்துகொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதியது. இதில் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடின. மேலும் லாரியின் முன்பக்க பாகங்கள் சேதம் அடைந்தன. அதிா்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா்.
விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு சாலையோரத்திற்கு நகா்த்திய பின் போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.