உடுமலை வட்டம், ஜல்லிபட்டி முழு நேர கிளை நூலகத்தில் புரவலா்களாக இருவா் இணைத்துக் கொண்டனா்.
இந்த நூலகத்தின் வளா்ச்சிக்காக இதுவரை 153 போ் ரூ. ஆயிரம் செலுத்தி புதிய புரவலா்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா். இந்நிலையில் இந்த நூலகத்தில் படித்து கடந்த ஆண்டு வனக் காவலராக அரசுப் பணியில் சோ்ந்துள்ள மணிகண்டன் ரூ. ஆயிரம் செலுத்தி 154ஆவது புரவலராகவும், ஜல்லிபட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் ரூ. ஆயிரம் செலுத்தி 155ஆவது புரவலராகவும் தங்களை இணைத்துக் கொண்டனா். நூலக வளா்ச்சிக்காக புரவலா்களாக இணைத்துக் கொண்டவா்களை நூலகா் லட்சுமணசாமி பாராட்டினாா்.