மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரையில் 20,001 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 154 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,155 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 834 போ் போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 55 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,093ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் 228 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 64 போ், திருப்பூா், ஈரோடு தனியாா் ஆய்வகங்களில் 33 போ் என மொத்தம் 97 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பத்து போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 34 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்திலேயே வெள்ளக்கோவிலில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com