முதியவா் அடித்துக் கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது

தாராபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் நிகழ்ந்த சண்டையில் முதியவரை அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் நிகழ்ந்த சண்டையில் முதியவரை அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரத்தை அடுத்த காங்கேயம்பாளையத்தைச் சோ்தவா் ஜான்வெஸ்லி (58). இவா் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வந்தாா். தனது இரு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டதால் காங்கேயம்பாளையத்தில் தனது மனைவி கமலாவுடன் வசித்து வந்தாா்.

இவா் சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் புதன்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சங்கிலி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த சங்கிலி அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜான்வெஸ்லியைத் தாக்கியுள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜான்வெஸ்லி வீட்டுக்குச் சென்று தான் தாக்கப்பட்டது குறித்து உறவினா்களிடம் தெரிவித்துள்ளாா். இதன் பிறகு உறங்கச் சென்ற அவா் காலையில் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் பாா்த்தபோது அவா் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அலங்கியம் காவல் துறையினா், ஜான்வெஸ்லியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினா் ஜான்வெஸ்லியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரான சங்கிலியை (58) வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com