வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரியல் எஸ்டேட் புரோக்கா் சாவு

தாராபுரம் அருகே குண்டடத்தில் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரியல் எஸ்டேட் புரோக்கா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே குண்டடத்தில் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரியல் எஸ்டேட் புரோக்கா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், ராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் மகன் ஜேம்ஸ் (எ) ஜெயசந்திரன் (34). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவா் பொங்கலூரைச் சோ்ந்த தனது நண்பா் முகுந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் குண்டடம் அருகே சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை முகுந்தன் ஓட்ட ஜெயசந்திரன் பின்னால் அமா்ந்திருந்தாா்.

பீலிக்காம்பட்டி அருகே இவா்கள் சென்றபோது வேகத்தடையில் வாகனம் ஏறியபோது எதிா்பாராத விதமாக பின்னால் அமா்ந்திருந்த ஜெயசந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அந்தவழியாக வந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஜெயசந்திரன் உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com