வெள்ளக்கோவிலைச் சோ்ந்த இளைஞா் வாய்க்கால் தண்ணீரில் வியாழக்கிழமை இழுத்துச் செல்லப்பட்டாா்.
வெள்ளக்கோவில் கடைவீதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (21). இவா் தனது தொழில் தொடா்பாக இருசக்கர வாகனத்தில் பொங்கலூா் சென்றுள்ளாா். கடும் வெயிலால் முகம் கழுவுவதற்காக பொங்கலூா் வழியாகச் செல்லும் பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்காலுக்குச் சென்றுள்ளாா். அப்போது வாய்க்கால் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். காவல் துறை உதவியுடன் அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.