காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
காங்கயம் அருகே உள்ள முத்தூா் சாலை மிதிப்பாறை பகுதி அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் சனிக்கிழமை காலையில் மான் ஒன்று தவறி வாய்க்காலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் வனத் துறை அலுவலா் காசிலிங்கம், உதவியாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட வனத் துறையினா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை மீட்டு காங்கயம் அருகே உள்ள ஊதியூா் காப்புக் காட்டியில் விட்டனா்.