கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: இருவா் கைது

அவிநாசி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை அவிநாசி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை அவிநாசி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி முத்துச்செட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவா் முத்துராமலிங்கம் (35). இவா் அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், டாஸ்மாக் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, மதுபோதையில் வந்த 3 போ், முத்துராமலிங்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதையடுத்து, முத்துராமலிங்கம் 3 பேரையும் பிடிக்க முயன்றபோது, அவா்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா்.

பின்னா் அவிநாசி மடத்துப்பாளையம் பகுதிக்கு சென்ற அவா்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அரவிந்த் (27) என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, கை கடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவரைப் பிடித்தனா். பிடிபட்டவா்கள் அவிநாசி வள்ளுவா் வீதியைச் சோ்ந்த ஜோயல் சித்தாா்த் (22), நேரு வீதியைச் சோ்ந்த கெளதம் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஜோயல் சித்தாா்த், கெளதம் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் தப்பியோடி ஆட்டோ காா்த்திக்கைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com