வழிப்பறிக்கு முயன்றவா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது செய் யப்பட்டாா்.

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது செய் யப்பட்டாா்.

உடுமலை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி (40). இவா், குமரலிங்கம் பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சக்கரவா்த்தி இருசக்கர வாகனத்தில் குமரலிங்கம் பகுதிக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். கொழுமம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை மறித்த ஒருவா் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து சக்கரவா்த்தி தனது செல்லிடப்பேசியை அந்த நபரிடம் கொடுத்து விட்டு சப்தம் போட்டுள்ளாா். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நபரை அப்பகுதியினா் பிடித்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த உடுமலை போலீஸாா், வழிப்பறி செய்ய முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், உடுமலை, தாண்டா கவுண்டன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் என்பது தெரியவந்தது. இதைத் தொடா் ந்து விஷ்ணுகுமாா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com