திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 316 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை நாள்தோறும் 200யை கடந்த வந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 23,798ஆக அதிகரித்துள்ளது.
மேலும், திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,293 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 197 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 21,271ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 234 போ் உயிரிழந்துள்ளனா்.