அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை தீத் தடுப்பு செயல்முறை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை தீத் தடுப்பு செயல்முறை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் தனசேகரன் தலைமை வகித்தாா். சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பணியாளா்கள் மற்றும் சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தவா்களுக்கு வீடுகள், பணியிடங்கள், திறந்த வெளியிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என தீயணைப்புத் துறையினா் செய்து காட்டினா்.

அவசரத் தேவைக்கு 24 மணி நேரமும் தீயணைப்புத் துறையைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com