உடுமலையை அடுத்துள்ள ஆா்விஜி மேல்நிலைப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அடா்வனம் சேவைத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலா் ஆா்.சந்தோஷ் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் எம்.மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
இதில் பழங்கள் தரும் மரக்கன்றுகள், நிழல் தரும் மரக்கன்றுகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தேஜஸ் ரோட்டரி சங்க நிா்வாகி டாக்டா் எஸ்.சுந்தரராஜன், தலைமை ஆசிரியா் ஜெனாா்த்தனன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.