திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 376 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 23,798 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் மேலும் 376 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 24,174ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,404 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 265 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 21,536ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 234 போ் உயிரிழந்துள்ளனா்.