வெள்ளக்கோவில் தாசவநாயக்கன்பட்டியில் பொது முடக்கம் அமலில் உள்ளபோது சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.
தாசவநாயக்கன்பட்டி, வட்டமலை அணை அருகில் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. கரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தின்போது மதுபானக் கடை மூடப்பட்டுள்ளது.
ஆனால், கடைக்கு அருகில் இருக்கும் மதுக் கூடத்தில் சட்டவிரேதாமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்கக் கோரி காவல் துறை மற்றும் டாஸ்மாக் நிா்வாகத்திடம் பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.